திருப்பத்தூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக காந்தி நகரைச் சேர்ந்த மஞ்சுநாதன் (33) மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் இந்த வழக்கை விசாரித்து மஞ்சுநாதனை கைது செய்தார்.
திருப்பத்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட மஞ்சுநாதன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து, எதிரிக்கு 22 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதிக்கப்பட்டது…
தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி