அரசியல்உள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் பெஞ்சல் புயல் மழையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டி முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை..!

பெஞ்சல் புயல் மழையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் – முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை..!
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

விழுப்புரம் – திருவண்ணாமலை – கிருஷ்ணகிரி -தர்மபுரி – போன்ற மாவட்டங்களில் வரலாறு காணாத கன மழை வெள்ளத்தில் வீடுகள் மூழ்கியதால் பல குடும்பங்கள் வாழ்தாரம் இன்றி தவிக்கின்றனர். மேலும் மழையில் இடிந்து சேதம் அடைந்த வீடுகளை அரசின் செலவில் கட்டி கொடுக்க வேண்டும்..மேலும் மழையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொது மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெற மருத்துவ முகாம்களை உடனடியாக அமைக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.

திருவண்ணாமலை மண் சரிவில் 7 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம்.இது போன்ற மலை பகுதி – தாழ்வான பகுதிகளில் வீடு கட்டி குடியேருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

எனவே பெஞ்சல் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகளை துரித படுத்த வேண்டும். மேலும் பெஞ்சல் புயல் மழையால் வாழ்வாதாரம் பாதிக்க பட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுகளுக்கு நிவாரண உதவியாக ரூ.10,000 தமிழக அரசு தாமதிக்காமல் உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button