குற்றம்முக்கிய செய்தி

திருப்பத்தூர் மாவட்ட தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது சுமார் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்…

திருப்பத்தூர் மாவட்ட
தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது சுமார் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்…

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரில் மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்…

இதன் அடிப்படையில் (03.11.2024) அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படையினர் சோதனை மேற்கொண்டதில் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொம்மிகுப்பம் அண்ணா நகர் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு,கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்த குமரவேல் (வயது 38) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு (4.11.2024) அன்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button