திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை….
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை….
கணக்கில் வராத பல லட்சங்கள் குறித்து சார்பதிவாளர் உமா மகேஸ்வரியிடம் விசாரணை…!
திருப்பூர் மாவட்டம்
தாராபுரத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் பத்திரப்பதிவு அலுவலர் உமா மகேஸ்வரியிடம் விசாரணை மேற்கொண்டதில் கணக்கில் வராத பல லட்சங்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பபற்றபட்டதால், அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது..
தவிர,பத்திரம் பதிய வந்தவர்களின் குழந்தைகளை போலிசார் அலுவலகத்தில் உள்ளே வைத்து தாளிட்டதால் குழந்தகளுக்கு உணவு கொடுக்க முடியாத சூழலும், குழந்தயை வெளியே அனுப்பாததால் குழந்தைகளின் பெற்றோர் அலுவலக படிகட்டுகளில் காத்து கிடந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளர் உமாமகேஷ்வரி பத்திரம் பதிய பொதுமக்களிடம் அதிக லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் இருந்தது..
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் சோதனைக்கு வருகிறார்கள் என்ற தகவலையடுத்து சார்பதிவாளர் உமா மகேஸ்வரி தனக்கு உடம்பு சரியில்லை என்று கூறிவிட்டு அலுவலகத்தை விட்டு அவசரகதியில் சென்றுவிட்டார். இதனால் பத்திரம் பதிய பொதுமக்கள் கால்கடுக்க காத்து கிடந்தனர்.. அதன் பின் மாற்று ஏற்பாடாக மாவட்ட பதிவாளர் வேறு ஒருவரை பத்திரம் பதிய தற்காலிகமாக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ரவிச்சந்திரன் தலைமையிலான காவலர்கள் தாராபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் சார்பதிவாளர் உமா மகேஸ்வரியை பத்துக்கு மேற்பட்ட அதிகாரிகள் சூழ்ந்து கொண்டு தொடர்ந்து விசாரணை நடத்தினர்.. இதில் கணக்கில் வராத பல லட்சங்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதனை அறிந்த அருகில் இருந்த பத்திரப்பதிவு எழுத்தாளர்கள் அலுவலகங்களை பூட்டிவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர்.
மேலும் சார்பதிவாளர் உமாமகேஸ்வரிக்கு பக்கபலமாக இருக்கும் பத்திர எழுத்தர் குமார் அலுவலகத்தில் இருந்த சில லட்சங்களை எடுத்துக்கொண்டு அலுவலகத்தை பூட்டி விட்டு ஓடிவிட்டார்..
மேலும் பத்திர பதிவுத்துறை அலுவலக கதவுகள் மூடப்பட்டதால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது…
செய்தியாளர்
அன்பழகன்