திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் போதை பொருட்களை அழிக்கும் நோக்கில் மாவட்டம் முழுவதும் சோதனை நடைபெற்றது…
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில்
மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பத்தூர் மதுவிலக்கு ஆய்வாளர் உலகநாதன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் 21.10.24 ஜோலார்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜி (26 ) வீட்டில் சோதனை செய்ததில் சட்டவிரோதமாக காய்ச்சிய 150 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தல்,வங்கி கணக்கு முடக்குதல், நீதிமன்ற காவலுக்கு உட்படுத்துதல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல்,பதுக்கி வைத்தல்,விற்பனை செய்தல் குறித்த தகவல்களை 91599 59919 என்ற தொலைப்பேசி எண்ணில் தெரிவித்து போதை பொருள் இல்லாத மாவட்டத்தை உருவாக்க காவல்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும்.தகவல் கொடுப்போரின் விவரம் ரகசியம் பாதுகாக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.