திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காளை மாட்டிற்கு நீச்சல் பழக ஏரிக்கு கொண்டு சென்ற போது சேற்றில் சிக்கி காளை உரிமையாளர் உயிரிழப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காளை மாட்டிற்கு நீச்சல் பழக ஏரிக்கு கொண்டு சென்ற போது சேற்றில் சிக்கி காளை உரிமையாளர் உயிரிழப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கதவாளம் பகுதியை சேர்ந்த பரந்தாமன் கட்டிடப் பணிகளுக்கு கம்பி கட்டும் தொழில் செய்து வருகிறார்.. இவர் 2 காளை மாடுகள் வைத்துக் கொண்டு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு பகுதிகளில் நடைபெறும் எருது விடும் விழாவில் காளைகளை போட்டியில் பங்கேற்க வைத்துள்ளார் .
இந்நிலையில் காளைகளுக்கு நீச்சல் பயிற்சி பழகுவதற்காக பக்கத்து கிராமமான காரப்பட்டு பகுதியில் உள்ள சின்ன ஏரிக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதியில் காளைகளுக்கு நீச்சல் பழகிக் கொண்டிருந்த போது திடீரென சேற்றில் சிக்கி காளை மாட்டின் உரிமையாளர் பரந்தாமன் நீரில் மூழ்கி வெளியே வராததால் உடன் சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து காப்பாற்ற முயற்சி செய்தும் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்த உமராபாத் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.