Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த செ.பிரேம்குமார் மாற்றுத்திறனாளி மாணவருக்கு பேட்டரி பொருத்திய வாகனத்தை ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் வழங்கினார்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமாரின் மகன் செ.பிரேம்குமார் மாற்றுத்திறனாளி மாணவர் ஆவார் .
தொழுவந்தாங்கள் கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அண்மையில் தான் பள்ளிக்கு சென்று வர மிகவும் சிரமமாக இருப்பதாகவும், தனக்கு பேட்டரியால் இயங்கக்கூடிய நான்கு சக்கர நகர்வு நாற்காலி வழங்க வேண்டும் என ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயனுக்கு சமூக வலைத்தளம் வாயிலாக கோரிக்கை வைத்திருந்தார்.
மாணவரின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக
ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன்
பேட்டரி பொருத்தப்பட்ட வாகனத்தை வழங்கினார்…
செய்தியாளர்
க.முருகன்