திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்தில் தந்தை இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் பேருந்தில் மயக்கம் போட்ட நடத்துனர்…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்தில் தந்தை இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் பேருந்தில் மயக்கம் போட்ட நடத்துனர்…
தாராபுரத்தில் இன்று காலை சுமார் 10:10 மணி அளவில் மதுரையிலிருந்து கோவை நோக்கி வந்த பேருந்து தாராபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விட நின்றது..அப்போது திண்டுக்கல் என்.எஸ் நகர் பகுதியை சேர்ந்த நடத்துநர் வெங்கடேசனின் தந்தை இறந்ததாக அலைபேசியில் தகவல் வந்ததை அடுத்து படிக்கட்டில் இருந்து கீழே மயங்கி விழுந்தார்..இதனால் தாராபுரம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் அருகில் இருந்த பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் சேர்ந்து அவருக்கு முகத்தில் தண்ணீர் தெளித்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் க்கு போன் செய்து அவரை மீட்டு தாராபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்…
செய்தியாளர்
அன்பழகன்