உள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டமலை ஜோதிநகரில் விசைத்தறித் தொழிலாளி ஞானசேகரன் மகளிர் குழு கடன் வழங்கும் மைக்ரோ பைனான்ஸ்களின் கடுமையான வசூல் கெடுபுடியால் தற்கொலை…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டமலை ஜோதிநகரில் விசைத்தறித் தொழிலாளி ஞானசேகரன் மகளிர் குழு கடன் வழங்கும் மைக்ரோ பைனான்ஸ்களின் கடுமையான வசூல் கெடுபிடியால்
30.10.24 அன்று
தமிழக முதல்வருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்…

சம்பவத்தை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சா.உமா உத்தரவின் பேரில் திருச்செங்கோடு கோட்டாட்சியர் சுகந்தி, துணை கண்கானிப்பாளர் இமையவரம்பன்,குமாரபாளையம் வட்டாட்சியர் சிவக்குமார்,குமாரபாளையம் காவல் ஆய்வாளர் டி.ஏ.தவமணி ஆகியோர் தலைமையில்
சம்மந்தப்பட்ட 12
மைக்ரோ பைனான்ஸ் மேலாளர்களையும்,
பொதுமக்கள் தரப்பில் விவசாய சங்கத் தலைவர் படைவீடு பெருமாள்,வழக்கறிஞர் கார்த்தி,
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் (TOPM) மாவட்ட இணை செயலாளர் “பஞ்சாலை” சண்முகம், திமுக கே.ஏ.இரவி, “விடியல்” இரா.பிரகாஷ்,மதிமுக எம்.விஸ்வநாதன் ம.நீ.ம சித்ராபாபு, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் சந்தரமதி,வாலிபர் சங்கம் மணிகண்டன், விவசாய சங்கம் தனேந்திரன் “காந்தி” சரவணன்,ல.மா.செல்வராசு,தி.க.காமராஜ் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்…
பேச்சுவார்த்தையில் கீழ்காணும் உத்தரவுகளை கோட்டாட்சியர் பிறப்பித்தார்..

1)குழு கடன் பெற்ற பெண்களிடம் ரிசர்வ் பேங்க் விதித்த விதிமுறைப்படிதான் தவணைத்தொகையை வசூலிக்க வேண்டும்
2)காலை 09.00 மணிமுதல் மாலை 06.00 மணிவரை மட்டுமே கடன் பெற்றவர் வீட்டிற்கு செல்லவேண்டும்..

3) இரண்டாவது தவணைத்தொகை செலுத்த தவறினால் மூன்றாவது தொகைக்காக நேரில் செல்லலாம்
அதுவும் மேல்குறிப்பிட்ட நேரத்திற்குள் மட்டுமே செல்லவேண்டும்..

4)பண்டிகை நாட்களில் பணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது.. அதுவும் முன்கூட்டியே இரண்டுவார தவணையை கேட்கக்கூடாது..

5)விதிமுறைகளையும் கோட்டாட்சியரின் இந்த உத்தரவுகளையும் மீறி மைக்ரோபைனான்ஸ் நிறுவனம் “தங்கள் வசூலிப்பாளர்களை அனுப்பி வசூலிப்பது குறித்து பொதுமக்களிடமிருந்து புகார் வந்தால் சம்மந்தபட்ட நிறுவன மேலாளரை உடனடியாக குற்ற நடவடிக்கையில் ஈடுபடுத்தி F.I.R போடப்படும் என கோட்டாட்சியர் மற்றும் காவல் கண்கானிப்பாளர் ஆகியோர் மைக்ரோபைனான்ஸ் நிறுவன மேலாளர்களிடம் எச்சரிக்கை விடுத்தார்கள்…

தற்கொலை செய்துகொண்ட ஞானசேகரனிடம் மிரட்டி கெடுபிடி செய்தவர்கள் யார்யாரென விசாரணைக்கு பிறகு முறையாக வழக்கு பதிந்து சம்மந்தபட்டவர்கள் மீது நடவடிக்கையை காவல்துறை எடுக்கும் என பொதுமக்கள் சார்பில் கலந்துகொண்டவர்களிடம் கோட்டாட்சியர் உறுதியளித்தார்..

மேலும் இறந்த குடும்பத்திற்கு இழப்பீடு தொகைக்கு மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்வதாகவும்,
மாவட்ட முழுவதும் உள்ள 40 மைக்ரோ பைனான்ஸ்களுக்கு அழைப்பு விடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்கானிப்பாளர்கள் முன்னிலையில் மைக்ரோபைனான்ஸ்களின் மேலாளர்களை வைத்து கூட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button