திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் ரூ.5-கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து.,புதிய திட்ட பணிகளை தொடங்கி வைத்தனர்…
திருப்பூர் மாவட்டம்
தாராபுரத்தில்
செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் ரூ.5-கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து.,புதிய திட்ட பணிகளை தொடங்கி வைத்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.108 கோடி மதிப்பீட்டில் பள்ளி உட்டகட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் முடிவுற்ற திட்டப்பணிகளை
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன். மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் திறந்து வைத்தனர்.தொடர்ந்து
நகர்ப்புற சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.3.58 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்கள்.
செய்தியாளர் சந்திப்பில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்ததாவது,
தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு புதிய திட்டப்பணிகளை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
அதில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வளையற்கார நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.32, இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள். ரூ.40. இலட்சம் மதிப்பீட்டில் சித்ராவுத்தன்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், ரூ.36.28 இலட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்9. சூளைமேட்டில் கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து.
நகர்ப்புற சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2.08 கோடி மதிப்பீட்டில் தார்சாலைகளை புதுப்பிக்கும் பணி மற்றும் ரூ.1. கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி என மொத்தம் ரூ.4.66 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தாராபுரம் நகர் மன்றத் தலைவர் பாப்புக்கண்ணன், தாராபுரம் நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார், நகராட்சி பொறியாளர் சுமதி, நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்…
செய்தியாளர்
அன்பழகன்