Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில்
கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் அம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு மனைவியை கொலை செய்த வழக்கில் நாட்றம்பள்ளி மல்லகுண்டா பகுதியை சேர்ந்த சின்னதம்பி (45) மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காவல் ஆய்வாளர் இந்த வழக்கை விசாரித்து சின்னதம்பியை கைது செய்தார்.

திருப்பத்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் (22.04.2025) தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட சின்னதம்பி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து, எதிரிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதிக்கப்பட்டது…

தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button