திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது…
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக
உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது…
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக
உலக மகளிர் தினம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு காவல் உதவி செயலி 181 விழிப்புணர்வு வாக்கத்தான் போட்டி
08.03.2025 உலக மகளிர் தினத்தை முன்னிட்டும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல் உதவி செயலி 181 குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராசு தலைமையில் பெண்களுக்கான வாக்கத்தான் விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் பெண் காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பங்கு பெற்றனர். வாக்கத்தான் விழிப்புணர்வு போட்டி வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் துவங்கி இஸ்லாமியா மகளிர் கல்லூரி மைதானத்தில் முடிவடைந்தது.
மேலும் நிகழ்ச்சியில் காவல் உதவி செயலி 181 குறித்தும், அதனை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் எடுத்துக் கூறி வாக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பரிசுகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.