கரூர் மாவட்ட காவல்துறை சார்பாக உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது…
கரூர் மாவடட்ட காவல்துறை சார்பாக 08.03.2025 ஆம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான இலவச உதவி மைய எண்.181 மற்றும் காவல் உதவி செயலி மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று காலை 07.00 மணிக்கு திருவள்ளுவர் மைதானத்தில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா. பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் 05 கிலோ மீட்டருக்கான மினி மாராத்தான் போட்டி மற்றும் 03 கிலோ மீட்டருக்கான வாக்கத்தான் போட்டிகளை துவக்கி வைத்தார். இப்போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவிகள்; பெண்காவலர்கள் மற்றும் பெண் ஊர்காவல் படையினர் உட்பட 500 பெண்கள் கலந்துகொண்டார்கள்.
மேலும் இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள்;, பெண் காவலர்கள் மற்றும் பெண் ஊர்காவல் படையினருக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர், காவல் துணைக்கண்காணிப்பாளர்கள் கரூர் நகர உட்கோட்டம், மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் காவல் ஆய்வாளர்கள் கரூர் நகரம், பசுபதிபாளையம் வட்டம் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.