Uncategorizedஅரசியல்உலகம்உள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமுக்கிய செய்தி

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்திலும் 11.04.25 அனைத்து காவல் நிலையங்களிலும் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமயில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்திலும் 11.04.25 அனைத்து காவல் நிலையங்களிலும் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமயில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

உறுதிமொழியில் சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒதுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளை பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்து தந்த அம்பேத்கர் பிறந்தநாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காண மாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன். என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்…

தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button