அரசியல்உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி

மதுரையில் சாலை விபத்தில் உயிரிழந்த தவெக நிர்வாகியின் கண்கள் தானம் செய்யப்பட்டது…

சாலை விபத்தில் உயிரிழந்த தவெக நிர்வாகியின்
கண்கள் தானம் செய்யப்பட்டது…

மதுரை பொன்மேனி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (30) தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை தெற்கு மாவட்ட மாணவர் அணி தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் ஆனந்த் நேற்று முன்தினம் நள்ளிரவில் பொன்மேனிப் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி முன்தினம் (நவ.21) பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது கண்கள் தானமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஆனந்தின் இல்லத்திற்கு சென்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அஞ்சலி செலுத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button