புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய இரத்ததான முகாமில் 40 யூனிட்கள் கொடையாக பெறப்பட்டது…
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில்
தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய இரத்ததான முகாமில்
40 யூனிட்கள் கொடையாக பெறப்பட்டது…
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அம்மாபட்டினம் கிளை 1 மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் அம்மாபட்டினம் வடக்கு தெரு ஈத்கா திடலில் உள்ள கட்டிடத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முஹம்மது மீரான், மாவட்ட மருத்துவர் அணிச் செயலாளர் சபியுல்லா, கிளைத் தலைவர் ராசிக், செயலாளர் இக்பால், பொருளாளர் யூசுப், துணைத்தலைவர் ஷேக்தாவுது மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள். இந்த முகாமின் துவக்க உரையாக மாவட்டத் செயலாளர் முஹம்மது மீரான், “ஒரு மனிதரை வாழ வைத்தவர் அனைத்து மனிதர்களையும் வாழ வைத்தவரைப் போன்றவர் ஆவார்”
என்ற குர்ஆனின் போதனையின் அடிப்படையிலும், இஸ்லாம் என்பது பிறர் நலன் நாடக்கூடியது என்ற நபிகள் நாயகம் நற்போதனைகள் அடிப்படையிலும் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பேசினார். இந்த முகாமில் ஆர்வத்துடன் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். மருத்துவ தகுதி அடிப்படையில் 40 யூனிட்கள் இரத்தம் கொடையாக பெறப்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. இரத்தம் வழங்கிய அனைவருக்கும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை மருத்துவர் ஹேமலதா சான்றிதழ்களை வழங்கினார். இறுதியாக மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் சபியுல்லா நன்றியுறை நிகழ்த்தினார். இம்முகாமில் பங்களிப்பு செய்த இரத்த வங்கி மேலாளர், அவரது குழுவிற்கும், இரத்தம் கொடையளித்த, கலந்து கொண்ட பொதுமக்கள், இதற்கான ஏற்பாடுகளை செய்த கிளை நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு
அம்மாபட்டினத்தில்
தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக
நன்றி தெரிவிக்கப்பட்டது…