திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் காவல் நிலையம் அருகில் கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு.. நல்வாய்ப்பாக காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர்…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் காவல் நிலையம் அருகில் கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு..
நல்வாய்ப்பாக காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர்…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மிட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தன் குடும்பத்துடன் காரில் ஆலங்காயம் வந்துள்ளார். அப்போது காரை ஆலங்காயம் காவல் நிலையம் அருகில் நிறுத்தியுள்ளார். அப்போது கார் இஞ்சின் பகுதியில் இருந்து புகை வருவதை கண்டு உடனடியாக காரில் இருந்தவர்களை இறக்கி உள்ளார். அப்போது கார் முழுவதுமாக தீ மளமளவென பரவி எரியத் தொடங்கியுள்ளது. இதனை பார்த்த ஆலங்காயம் காவல் துறையினர் தீயணைப்பான் கருவியை எடுத்து வந்து தீயை அணைக்க முயன்றுள்ளனர். இருந்த போதிலும் தீ அதிக அளவில் எரியத் தொடங்கியதால் உடனடியாக ஆலாங்காயம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீ பற்றி எரிந்து கொண்டிருந்த காரை தண்ணீர் பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் கார் முன்பக்கம் முற்றிலுமாக எரிந்து நாசமானது.
சம்பவம் தொடர்பாக ஆலங்காயம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆலங்காயம் காவல் நிலையம் அருகில் கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்
கோபி