திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நண்பர்களுடன் சுற்றுலா சென்று விட்டு ஊர் திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு…மற்றொரு இளைஞர் படுகாயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதி…
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நண்பர்களுடன் சுற்றுலா சென்று விட்டு ஊர் திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு…மற்றொரு இளைஞர் படுகாயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதி…
வாணியம்பாடி : சென்னை தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 6 பேர் 3 இருசக்கர வாகனங்களில் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது,
ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதி பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் யஷ்வந்த் என்ற கல்லூரி மாணவன் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதில் யஷ்வந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் யஷ்வந்துடன் அமர்ந்து சென்ற ஆகாஷ் என்ற இளைஞர் படுகாயமடைந்தார். படுகாயம் அடைந்தவரை உடன் வந்த நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் இருவரையும், அவ்வழியாக சென்ற சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு ஆகாஷிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்…
செய்தியாளர்
கோபி