விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம், எஞ்சார் வருவாய் கிராமத்தில் சுற்றுப்புற சூழலை மோசமாக பாதிக்கும் வகையில் குப்பைகளை கொட்டி பொது பாதை ஆக்கரமிப்பை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை…!
விருதுநகர் மாவட்டம்
சிவகாசி வட்டம், எஞ்சார் வருவாய் கிராமத்தில்
சுற்றுப்புற சூழலை மோசமாக பாதிக்கும் வகையில் குப்பைகளை கொட்டி பொது பாதை ஆக்கரமிப்பை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை…!
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், எஞ்சார் வருவாய் கிராமம் – இ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் நீதிமன்றம் அருகில் உள்ள முனியாண்டி கோவில் சுற்றுவட்டாரத்தில், தனியார் நிலங்கள் மற்றும் அரசு பொது பாதைகளில் முறையற்ற வகையில் கொட்டப்படும் குப்பைகளால் சுற்றுப்புற சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
புதிய வீடுகள் கட்டும் திட்டத்தில் உள்ளவர்கள் மற்றும் நிலம் வாங்குபவர்கள், துர்நாற்றம் மற்றும் குப்பைக் கழிவுகளால் பெரும் இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். இப்பகுதியில் சுகாதார நிலையம், நீதிமன்றம், RTO அலுவலகம், ESI மருத்துவமனை போன்ற முக்கிய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினமும் வருகை தரும் பொதுமக்களுக்கு சுகாதாரமான சூழல் இல்லாததால் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
மேலும் எஞ்சார் கிராமம் S.No.1516 மற்றும் அதன் அருகே உள்ள முக்கிய பாதை தற்போது முற்றிலும் பயன்பாட்டுக்கு வராத நிலைமை உள்ளது. அந்த பாதையின் வழியாக செல்ல இயலாததால் பொதுமக்கள் தனியார் சொந்த நிலங்களின் வழியாக செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதனால் அந்த நில உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தகராறு மற்றும் இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்தப் பாதையை மீட்டெடுத்து சீரமைத்து சாலை வசதி செய்து பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமெனவும் முறையற்ற குப்பைக் கிடங்காக மாறி வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம், பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, சுத்தமான, பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்….
செய்தியாளர்
செல்லபாண்டி