Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூா் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 25 பயணிகள் காயம்..!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூா் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 25 பயணிகள் காயம்..!

ஓசூரில் இருந்து வேலூர் நோக்கி 25க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அரசு பேருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிலி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள மின் கம்பத்தின் மீது மோதி பின்னர் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது..விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில் தர்மபுரியை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் கோவிந்தசாமி இடுப்பு பகுதியில் பலத்த காயமடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்… விபத்து குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் எனவும் நள்ளிரவு நேரங்களில் பேருந்து இயக்க தடை விதிக்க வேண்டும் எனவும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்..

தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button