Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் அடுத்த சின்னமோளரப்பட்டியை சேர்ந்த சீரங்க சாமி என்பவரின் மனைவி விசாலாட்சி (62) காணாமல் போன நிலையில் பிணமாக மீட்பு…

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் அருகே உள்ள சின்னமோளரப்பட்டியை சேர்ந்த சீரங்க சாமி என்பவரின் மனைவி
விசாலாட்சி (வயது-62).மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 2 வருடங்களாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த
17 ம் தேதி மனநல ஆலோசனைக்காக கோவையில் உள்ள மருத்துவமனைக்கு சென்று வந்த அவர் தனது அண்ணன் சுப்பிரமணி என்பவர் வீட்டுக்கு செல்ல வேண்டும் என தனது கணவரிடம் கூறியுள்ளார்.எனவே சீரங்கசாமி தனது மனைவி விசாலாட்சியை அழைத்து சென்று கொழிஞ்சி காட்டு புதூரில் உள்ள அவரது அண்ணன் சுப்பிரமணி வீட்டில் விட்டுள்ளார். இந்நிலையில் நேற்று சுப்பிரமணி அதிகாலை 4 மணிக்கு சீரங்க சாமிக்கு போன் செய்து விசாலாட்சியை காணவில்லை என்று கூறியுள்ளார்.உடனே சீரங்க சாமி கொழிஞ்சிக்காட்டு புதூர் சென்று உறவினர் வீடுகள் மற்றும் அக்கம் பக்கம் தேடி பார்த்துள்ளார்.
எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் குண்டடம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.அவரது புகாரினை பெற்றுக் கொண்ட போலீசார் விசாலாட்சியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில்
இன்று (சனிக்கிழமை)காலை
07:00 மணியளவில் உப்பாறு அணை பராமரிப்பு பணிக்காக சென்றவர்கள் அணையின் உள்ளே வயதான பெண்மணியின் பிரேதம் குப்புற கிடப்பதாக குண்டடம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். உடன் விரைந்து சென்ற காவலர்கள் உடலை பார்த்தபோது காணாமல் போன விசாலாட்சி என்பதை கண்டறிந்தனர்.பின்னர் விசாலாட்சியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்… இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்
அன்பழகன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button