திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் ஊத்தங்கரை யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது…
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் ஊத்தங்கரை யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது…
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் செயல்பட்டு வரும் தொன் போஸ்கோ மையத்தில் யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி இரண்டு நாட்கள் நடைப்பெற்றது.
ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மூலமாக மாணவ, மாணவிகளுக்கும், பேராசிரியர்களுக்கும் கல்வி சார்ந்த சுற்றுலா, திறன்களை வளர்த்துக் கொள்வதோடு பேராசிரியர்கள் ஆர்வத்துடன் கல்வி வளர்ச்சியில் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியானது கல்லூரியின் நிறுவனர் மற்றும் முதல்வர் முனைவர் க.அருள் தலைமையில் நடைபெற்றது.
கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் வெங்கடாசலம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
முதல் நாள் நிகழ்வில் மருத்துவத்துறை மூத்த மார்கெட்டிங் அலுவலர் மாதவன் கிருஷ்ணன், பெரியார் பல்கலைக் கழக பொருளாதாரத் துறைத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன், வாணியம்பாடி மருதர் ஜெயின் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் இன்பவல்லி ஆகியோர் உரையாற்றி கற்றல், கற்பித்தலில் ஏற்படும் குறைபாடுகள், மாணவ மாணவிகளிடையே ஏற்படும் மன உளௌச்சலை போக்கி பாடம் கற்பித்தல் முறை ஆகியவற்றை விளக்கி பேசினார்கள்.
தொடர்ந்து இரண்டாவது நாள் நிகழ்வில் பெரியார் பல்கலைக் கழகத்தின் மேனாள் பதிவாளர் , ISPA – தலைவர் இயற்பியல் துறை சேது குணசேகரன், பெரியார் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் தருமபுரி முதுகலை மற்றும் உயராய்வு துறைத் தலைவர்கள் பேராசிரியர் முனைவர் செல்வபாண்டியன்(இயற்பியல் துறை), பேராசிரியர் முனைவர் கோவிந்தராஜ் (ஆங்கிலத்துறை) சென்னை முனைவர் ஜனனி பன்னீர்செல்வம் ஆகியோர் உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியில் கணினித் துறைத் தலைவர் சங்கர் நன்றியுரை வழங்கினார்.
நிகழ்ச்சியினை ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் ஐஸ்வர்யா தொகுத்து வழங்கினார்…
தலைமை செய்தியாளர்
S. ராஜிவ்காந்தி