Uncategorizedஉலகம்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி

கும்பகோணம் ஒன்றியம் முத்துப்பிள்ளை மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் (22-4-2025) உலக புவி தினம் கொண்டாடப்பட்டது.

கும்பகோணம் ஒன்றியம் முத்துப்பிள்ளை மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் (22-4-2025) உலக புவி தினம் கொண்டாடப்பட்டது.

“பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிப்போம்”

“மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவோம்”

என்ற வாசகத்துடன் கூடிய மஞ்சப்பை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது…

பள்ளி மாணவர்களுக்கு இனிப்புடன் கூடிய மஞ்சப்பையை
வட்டார வளமைய மேற்பார்வையாளர் இராமலிங்கம் ஆசிரிய பயிற்றுனர்கள் இராதாகிருஷ்ணன், பூங்குழலி, விஜிதா, வெங்கடேஸ்வரி, கங்காதரன், குணசேகரன், செந்தில்குமார், பழனியப்பன் ,ரேவதி, கணக்காளர் இலக்கியா பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெனிபர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வழங்கினர்.
மேலும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது .
முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் கோ.சாந்தி அனைவரையும் வரவேற்று நமது பூமியை நாம் எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து உரையாற்றினார்.
இறுதியாக பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

தலைமை செய்தியாளர்
JDPN

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button