Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்நாடுமதம்முக்கிய செய்தி

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் மொட்டை கோபுரத்தில் 5 நிலை ராஜகோபுரம் கட்ட அனுமதி..

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில்
மொட்டை கோபுரத்தில் 5 நிலை ராஜகோபுரம் கட்ட அனுமதி..

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலின் தெற்கு நுழைவு வாயிலில் உள்ள மொட்டை கோபுரத்தில் 7 நிலை கொண்ட ராஜ கோபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டு, வரைபடம் தயாரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தொல்லியல் வல்லுநர் மதிவாணன், திருச்சி என்ஐடி பேராசிரியர் சுவாமி நாதன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் மொட்டை கோபுரத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து, 7 நிலை கோபுரத்துக்குப் பதிலாக 5 நிலை கொண்ட கோபுரம் கட்ட பரிந்துரை செய்தனர்.

இதற்கு தற்போது இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இதையடுத்து,5 மாதங் களில் பணிகள் தொடங்கி ஓராண்டுக்குள் நிறைவடையும் என அறநிலையத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியது: ஆதிகும்பேஸ்வரர் கோயில் மொட்டை கோபுரத்தில் 5 நிலை கோபுரம் கட்ட ரூ.3 கோடியில் ஒப்பந்தப்புள்ளி நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன், கோயில் நிதி அல்லது உபயதாரர் நிதியுதவியுடன் 5 மாதங்களில் பணிகள் தொடங்கி,ஓராண்டுக் குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள மாசி மகாமகத்துக்குள் ராஜகோபுரம் கட்டும் பணி நிறைவடையும் என தகவல்…

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button