திருப்பத்தூர் மாவட்ட அரிமா ரோட்டரி சங்க வளாகத்தில்,தமிழ் நாடு அருந்ததியர் இட ஒதுக்கீடு போராட்ட இயக்கத்தின் (MRPS) திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது…
திருப்பத்தூர் மாவட்ட அரிமா ரோட்டரி சங்க வளாகத்தில் தமிழ் நாடு அருந்ததியர் இட ஒதுக்கீடு போராட்ட இயக்கத்தின் (MRPS) திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது…
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் நாடு MRPS மாநில தலைவர் த.லோகேஷ் குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்…
அருந்ததியர் இட ஒதுக்கீடு போராட்ட இயக்கத்தின் (MRPS) திருப்பத்தூர் மாவட்ட தலைவராக S.ரமேஷ், மாவட்ட செயலாளராக வெங்கடேசன், மாவட்ட ஆலோசகராக R.ஜெயமூர்த்தி ஆகியோரை மாநில தலைவர் (பொறுப்பு) நியமனம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு S.ரமேஷ் தலைமை தாங்கினார்…
வெங்கடேசன் முன்னிலை வகித்தார்…
நிகழ்ச்சி ஏற்பாடுகளை வடக்கு மண்டல செயலாளர் பார்த்திபன் செய்தார்.
இந்த அறிமுக கூட்ட நிகழ்ச்சியில் MRPS தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் மற்றும்
கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட அருந்ததியர் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.