Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமுக்கிய செய்தி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காதலனுடன் தகராறு ஜார்கண்ட் மாநிலத்தில் சேர்ந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காதலனுடன் தகராறு ஜார்கண்ட் மாநிலத்தில் சேர்ந்த இளம்பெண் தூக்கிட்டுதற்கொலை..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள விட்டல் நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூர் பகுதியைச் சேர்ந்த சுசிலாமஜிம் (22) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் இவரது காதலரான ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கும் இளைஞருக்கும் போனில் பேசும் பொழுது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இளம் பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த வேடசந்தூர் ஆய்வாளர் வேலாயுதம் துணை ஆய்வாளர் அழகர்சாமி தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வேடசந்தூர் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்…