விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பங்கின் துணைப்பங்கான T.புதுப்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் சூசை தந்தையின் திருவிழா…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பங்கின் துணைப்பங்கான T.புதுப்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் சூசை தந்தையின்
திருவிழா
திருப்பலி 28-04-2025 திங்கட்கிழமை அன்று அருட்தந்தை தேவராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 30-04-2025 புதன்கிழமை அன்று அருட்தந்தை கென்னடி ( தூய ஆவியானவர் சபை) தேவ செய்தி வழங்கினார்.நூற்றுக்கும் மேற்பட்ட கிருஸ்தவ குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
01-05-2025 வியாழக்கிழமை பங்குதந்தை ஜோசப் அமலன் தலைமையில் சிறப்பு ஆராதனை மற்றும் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சமத்துவ
பொங்கல் வைத்தனர்..பின்பு புனித சூசையப்பரின் தச்சு தொழிலை நினைவுகூர்ந்து அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள் கூறினர். மதியம் 1 மணிக்கு கொடியிறக்கம் செய்யப்பட்டது.நிகழ்ச்சி முடிவில்
சே.முத்துகுமார் அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பங்கெடுத்து புனித சூசையப்பரின் ஆசிர்வாதம் பெற்றனர்…
செய்தியாளர்
செல்லபாண்டி