Uncategorizedஉள்ளூர் செய்திகள்நாடுமதம்முக்கிய செய்தி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பங்கின் துணைப்பங்கான T.புதுப்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் சூசை தந்தையின் திருவிழா…

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பங்கின் துணைப்பங்கான T.புதுப்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் சூசை தந்தையின்
திருவிழா திருப்பலி 28-04-2025 திங்கட்கிழமை அன்று அருட்தந்தை தேவராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 30-04-2025 புதன்கிழமை அன்று அருட்தந்தை கென்னடி ( தூய ஆவியானவர் சபை) தேவ செய்தி வழங்கினார்.நூற்றுக்கும் மேற்பட்ட கிருஸ்தவ குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
01-05-2025 வியாழக்கிழமை பங்குதந்தை ஜோசப் அமலன் தலைமையில் சிறப்பு ஆராதனை மற்றும் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சமத்துவ
பொங்கல் வைத்தனர்..பின்பு புனித சூசையப்பரின் தச்சு தொழிலை நினைவுகூர்ந்து அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள் கூறினர். மதியம் 1 மணிக்கு கொடியிறக்கம் செய்யப்பட்டது.நிகழ்ச்சி முடிவில்
சே.முத்துகுமார் அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பங்கெடுத்து புனித சூசையப்பரின் ஆசிர்வாதம் பெற்றனர்…

செய்தியாளர்
செல்லபாண்டி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button