திருப்பத்தூர் மாவட்ட RTI பயிற்சியாளர் பத்து ரூபாய் இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளருமான வெ.ருமன் கடந்த 14.04.2025 அன்று முதலமைச்சர் தனிப்பிரிவு மூலம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கடிதத்தில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகத்திலும் அரசாணை எண் 73 ன் படி பொதுமக்கள் தபால் மூலமாகவும் நேரடியாகவும் மனு கொடுத்தால் ஒப்புகைச்சீட்டு வழங்க வேண்டும் என மனு அளித்திருந்தார்.
திருப்பத்தூர் மாவட்ட RTI பயிற்சியாளர் பத்து ரூபாய் இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளருமான வெ.ருமன் கடந்த 14.04.2025 அன்று முதலமைச்சர் தனிப்பிரிவு மூலம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கடிதத்தில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகத்திலும் அரசாணை எண் 73 ன் படி பொதுமக்கள் தபால் மூலமாகவும் நேரடியாகவும் மனு கொடுத்தால் ஒப்புகைச்சீட்டு வழங்க வேண்டும் என மனு அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வம் கடந்த (20.05.2025) சுற்றறிக்கை எண் COLREV.COLR/7408/22.A4) அன்று அனுப்பிய சுற்றறிக்கையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்படுகின்ற அனைத்து துறை அரசு அலுவலங்களிலும் பொதுமக்கள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாக அளிக்கும் மனுக்களுக்கு அரசாணை 73-ல் அறிவுறுத்தியுள்ளவாறு மனு பெறப்பட்ட 3 நாட்களுக்குள் மனு பெற்றுக் கொண்டதற்கான மனுதாரருக்கு ஒப்புகைச் சீட்டினை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து துறை முதல்நிலை அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
செய்தியாளர்
கோபி