திருப்பூர் மாவட்டம் தாராபுரம், விவேகம் பள்ளியில் 2024- 2025 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மாபெரும் சாதனைப் பெற்றவர்கள் விவரம்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், விவேகம் பள்ளியில் 2024- 2025 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மாபெரும் சாதனைப் பெற்றவர்கள் விவரம்.
தாராபுரம், மே 09-
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் உள்ள திருமலை பாளையத்தில் விவேகம் பள்ளியில் 2024- 2025 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மாபெரும் சாதனைப் பெற்றுள்ளார்கள்.இந்த சாதனைகளில் மேலும் ஒரு மைல்கல்லாக பள்ளி அளவில் 598/600 மதிப்பெண்கள் பெற்று கே.கிருஷ்ணபிரியன் நான்கு பாடங்களிலும் 100/100 மதிப்பெண்கள் பெற்று பொறியியல் கட் ஆப் 200 /200 க்கு எடுத்து முதலிடமும் 597/600 மதிப்பெண்கள் பெற்று ஆர்.ரஞ்சித் இரண்டாமிடமும் 592/ 600 மதிப்பெண்கள் பெற்று கே.தான்யஸ்ரீ மூன்றாமிடமும் பள்ளியில் 72 சதங்கள் எடுத்தும் மாணவர்கள் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
விவேகம் பள்ளியில் இக்கல்வியாண்டிலும் மாணவர்கள் 100% தேர்ச்சிப் பெற்றுச் சாதனைப் புரிந்துள்ளனர். இவ்வெற்றிக்கு உறுதுணையாக இருந்த விவேகம் பள்ளியின் தாளாளர் முனைவர் ஆர்.சுப்பிரமணியன், செயலாளர் முனைவர் கே.பூபதி,பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசு வழங்கி சிறப்பித்தனர்..
செய்தியாளர்
அன்பழகன்