உள்ளூர் செய்திகள்

எண்ணங்களின் சங்கமம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின்,மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருப்பத்தூரில் நடைபெற்றது…!

“எண்ணங்களின் சங்கமம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின்,மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருப்பத்தூரில் நடைபெற்றது…!
எண்ணங்களின் சங்கமம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விருதாச்சலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பாண்டிச்சேரி மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி சமூகப் பணித்துறையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு AK மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பு.வேலு தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட உதவும் உள்ளங்கள் சந்திரசேகர், திருப்பத்தூர் மாவட்ட உதவு உள்ளங்கள் ரமேஷ்,சமூக பணித்துறை தலைவர் அருட்தந்தை ஆண்ட்ரூஸ் ராஜா,ரெட் கிராஸ் சொசைட்டி துணைத்தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் எண்ணங்களின் சங்கமம் நிறுவனத் தலைவர் J.பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அமைப்பின் தலைவர் பிரபாகரன் பேசும் பொழுது, அரசோடு இணைந்து மக்களுக்கு சென்று வேண்டிய உதவிகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தார்மீகமான அடிப்படையில் உரிமை உள்ளது என்று கூறினார்.இந்த கூட்டத்தில் வடிவேல் சுப்பிரமணியம்,அம்பலூர் அசோகன், ராம்குமார், திருமாவிமல் ராதாகிருட்டிணன்,அரங்க பிரபு, சேதுராமன், பிரகாசம், ஊராட்சி மன்ற தலைவர் ராமு உள்ளிட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.விழாவின் முடிவில் வெங்கடேசன் அனைவருக்கும் நன்றி கூறினார்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button