தமிழக சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளால் தொடரும் வாகன விபத்துக்கள் – கால்நடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் – அரசுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை…!
தமிழக சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளால் தொடரும் வாகன விபத்துக்கள் – கால்நடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் – அரசுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை…!
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தமிழகம் முழுவதும் சாலைகளில் ஆடு, மாடு போன்ற கால் நடைகள் சுற்றி திறிந்து வருகின்றன. சாலைகளில் சுற்றி திரியும் கால் நடைகளால் உயிர் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் கால்நடைகளால் அதிகமான சாலை விபத்துக்கள் நடை பெற்று வருகின்றன.
கால்நடைகளால் வாகன ஓட்டிகள் சாலை விபத்துகுள்ளாகி கை,கால் முறிந்து படுகாயம் அடைந்தும்,பலர் உயிரிழந்தும் உள்ளனர்..மேலும் கால் நடைகளின் உரிமையாளர்கள் கால்நடைகளை சொந்த இடங்களில் வைத்து முறையாக பராமரிக்காமல் சாலைகளில் விடுவதினால் வாகன ஓட்டிகள் விபத்துகுள்ளாகி உயிரிழந்து வருகின்றனர்…மேலும் ஊராட்சி,பேரூராட்சி , நகராட்சியில் உள்ள அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருப்பதன் காரணமாக தொடர்ந்து இது போன்ற சாலை விபத்துகளில் வாகன ஒட்டிகள் சிக்கி வருகின்றனர்.
குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலை போன்ற சாலைகளில் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் விபத்துகுள்ளாகி படுகாயங்கள் – உயிரிழப்பு போன்று ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் சம்பந்தபட்ட கால்நடைகளின் உரிமையாளர்கள் யார் என்று கண்டறிந்து சட்ட ரீதியாக அபதாரம் மற்றும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக தமிழக அரசை கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.