உள்ளூர் செய்திகள்குற்றம்

திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (30.10.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையில் “தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி” ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது…

திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (30.10.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையில் “தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி” ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

“தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி”

இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமார உறுதி அளிக்கிறேன் என ஏற்கப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும் மற்றும் காவல் நிலையங்களிலும் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன், குற்றப்பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்,தனிப்பிரிவு ஆய்வாளர், ஆய்வாளர்கள், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர், காவலர்கள் மற்றும் அலுவலக அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டனர்….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button