உள்ளூர் செய்திகள்

ஆற்காடு பாலாறு மேம்பாலம் பராமரிப்பு காரணமாக போக்குவரத்து தடை..!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பாலாறு புதிய பாலம் பராமரிப்பு சீரமைக்கும் பணி காரணமாக 19.07.2024 முதல் 19.08.2024 வரை வாகனங்கள் செல்ல தடை.. மாற்றுப் பாதையில் செல்ல தேசிய நெடுஞ்சாலை துறை அறிவிப்பு…!!

இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு-இராணிப்பேட்டை இடையிலான பாலாற்றில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் பராமரிப்பு சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் வரும் 19.07.24 வெள்ளிக்கிழமை முதல் ஒரு மாதக்காலம் வரை வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என தேசிய நெடுஞ்சாலை துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வேலூரிலிருந்து சென்னை நோக்கி செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து கனராக வாகனங்களும் விசாரம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தில்லை திருமண மண்டபம் இடதுபுறமாக வளைந்து தெங்கால் வழியாக வாலாஜா டோல்கேட் இணைப்பு சாலையில் செல்ல வேண்டும் எனவும், அதேபோன்று வேலூரிலிருந்து ஆற்காடு வழியாக சென்னை செல்லும் பேருந்துகள் விசாரம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள A2B உணவகம் எதிரே உள்ள இணைப்பு சாலையில் சென்று ஆற்காடு தேசிய நெடுஞ்சாலையில் இணைந்து செல்ல வேண்டும் மேலும் சென்னையிலிருந்து வாலாஜா வழியாக வேலூர் செல்லும் பேருந்துகள், கனராக வாகனங்கள் தெங்கால் வழியாகவே சென்று தேசிய நெடுஞ்சாலையில் இணைய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button